Sunday, July 24, 2011

குதிரை வாகனத்தில் பவானியம்மன் திருவீதியுலா


ஊத்துக்கோட்டை, ஜூலை 25:


ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமை என 10 வாரங்கள் தொடர்ந்து விழா நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர், பிற மாநில பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவின் 2 வாரமான நேற்று காலை அம்மனுக்கு மலர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலை குதிரை வாகனத்தில் ராஜபார்ட் அலங்காரத்தில் பவானியம்மன் திருவீதியுலா வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் கூழ் ஊற்றினர். விழாவையொட்டி, ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்கள் ஊத்துக்கோட்டை மற்றும் ஜனப்பன்சத்திரம் வழியாக திருப்பி விடப்பட்டன.

Friday, July 22, 2011

பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா


பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா 10 வாரங்கள் நடைபெறும். திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதி கூறியதாவது:
ஆடித் திருவிழாவையொட்டி, பெரியபாளைம் பவானியம்மன் கோயிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள். சனி, ஞாயிற்று கிழமைகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
10 வாரங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 டிஎஸ்பி தலைமையில், 5 இன்ஸ்பெக்டர், 16 சப் இன்ஸ்பெக்டர், 8 பெண் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையிலும், ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையிலும் திருப்பி விடப்படும். 

Sunday, July 17, 2011

பெரியபாளையம் பவானி அம்மன்

பவானி அம்மன் கோயிலில்,ஆடித்திருவிழா கோலாகலம்
ஊத்துக்கோட்டை, ஜூலை 18:
பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர், பிற மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
பக்தர்கள் மாட்டு வண்டி, வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு கோயிலுக்கு வருவார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, இரு தினங்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை கோ பூஜையும், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், நேற்று முன்தினம் கணபதி ஹோமமும், 108 பால்குடம் அபிஷேகமும் நடந்தது.
நேற்று அதிகாலை அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் நவகலச பூஜை நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பொங்கல் வைத்து, உடலில் வேப்பிலை கட்டி கோயிலை வலம் வந்தனர். மேலும், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் திரண்டனர்
கோயிலுக்கு வேப்பிலை ஆடை கட்டி வந்த சிறுமி.



பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் முதல் வார ஆடித் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம். அடுத்தபடம்: பெரியபாளையத்துக்கு பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அங்குள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை செம்மர கட்டைகள் பிடிபட்டன

ஊத்துக்கோட்டையில் உள்ள நாகலாபுரம் சாலையில் உள்ள சோதனை சாவடியில், ஊத்துக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் அந்த கார் வேகமாக சென்றது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், எஸ்.ஐ.க்கள் ரஜினிகாந்த், கணேசன், ஏட்டு சங்கர் ஆகியோர் பைக்கில் காரை பின்தொடர்ந்து, ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே சுற்றி வளைத்தனர்.
உடனே, கார் கதவை திறந்து வெளியே வந்த டிரைவர் சற்று தூரம் ஓடினார். காருக்கு பின்னால் வந்த பைக்கில் ஏறி அவர் தப்பி விட்டார். பின்னர், போலீசார் காரில் சோதனையிட்டனர். அதில் 14 செம்மர கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த காரை, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். தப்பியோடிய டிரைவரையும், பைக்கில் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள்.

ஊத்துக்கோட்டையில் அரசு மருத்துவமனைல் டாக்டர் இல்லாததால் பரிதாபம்

ஊத்துக்கோட்டை, ஜூலை 17:
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சரவணன் (24), தனியார் நிறுவன ஊழியர். தனது நண்பர்களான தாம்பரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர், நாகூர் மீரான், அரவிந்த், ஆனந்த்ராஜ், வெங்கட் ராமச்சந்திரன், விஷால், விக்னேஷ் உட்பட 9 பேருடன் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த நாகலாபுரம் அருகே சத்திகூடு மடுகு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் அனைவரும் குளித்தனர். குளித்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, சரவணனை மட்டும் காணவில்லை. அவரை தேடிய போது, மூச்சு திணறலால் நீர்வீழ்ச்சி அருகே மயங்கி கிடந்தார்.
உடனே,மாலை 4.30 மணியளவில் அவரை, ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால், அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் சரவணன் இறந்தார். சரவணனின் நண்பர்கள், அவரது சடலத்தை மருத்துவமனை முன்பு வைத்து அழுதனர்.
தகவலறிந்து, ஊத்துக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. ரஜினிகாந்த் அங்கு வந்தார். சம்பவம் நடந்த பகுதி ஆந்திர மாநிலம் என்பதால் நாகலாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Friday, July 15, 2011

ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தாராட்சி கிராமத்தில் ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி,
  
சீத்தஞ்சேரி பகுதியில் மணல் குவாரி இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வந்த லாரிகளை சிறை பிடித்த கிராம மக்களுடன் தாசில்தார் பிரசன்னா, எஸ்.ஐ. ரஜினிகாந்த் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

Wednesday, July 13, 2011

COURIER Office In Uthukottai





UTHUKOTTAI  UKT  167, Nehru Bazar, C/O Savitha Medicals, Uthukkottai - 602026   Mr.A. Balaji Kumar  9443640454,044-27630826  



Monday, July 11, 2011

ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா தேவாலய 22ம் ஆண்டு தேர் திருவிழா





ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாதா ஊர்வலத்தில் சிறுவர்கள், பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அடுத்தபடம்: வெள்ளி தேரில் உலா வந்த மாதா.
ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா தேவாலய 22ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பாலகர்கள் தினம், மறைக்கல்வி தினம், குடும்பங்கள் தினம், சுகம் தரும் தினம் கொண்டாடப்பட்டது.
நேற்று முன்தினம் வெள்ளி தேரில் அடைக்கல மாதா ஊர்வலம் நடந்தது. தேருக்கு முன்பாக பெண்கள், சிறுவர்கள் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி சென்றனர். இறுதிநாளான நேற்று பங்கு தந்தை பெலிக்ஸ் பிலிப் தலைமையில் பாதிரியார்கள் லியோ, ஜேம்ஸ், உபால் தூஸ், பீட்டர் ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிறகு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. ஆலய நிர்வாகிகள் அந்தோணி குரூஸ், குமார், அந்தோணி ராஜ், பாக்யராஜ், ராபர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, July 2, 2011

NEW SIGNAL POST AS BEEN INSTALLED IN UTHUKOTTAI

There is heavy traffic in morning and evening, to avoid that the new signal post has been placed the old signal post automatically fall down due to not using that after six month the new signal post have been placed ,to avoid traffic and a new traffic police also placed there to follow rules .the signal is not activated ,but placed one week before.





Friday, July 1, 2011

LATEST NEWS IN UTHUKOTTAI

To Get the latest news about the city -uthukottai,
you need to click the

FOLLOWERS button in my blog

LATEST NEWS IN UTHUKOTTAI(2011)