Saturday, September 3, 2011

ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்க பணி

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தேர்வாய் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஜனப்பன்சத்திரம் முதல் சூளைமேனி வரை செல்லும் இருவழி சாலையை, நான்கு வழி சாலையாக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, ரூ.80 கோடியில் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு தேவையான இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. சாலையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் அடியோடு அகற்றப்பட்டு வருகிறது.
சூளைமேனியில் இருந்து ஜனப்பன்சத்திரம் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு உள்ள மரங்களை பொக்லைன் மூலம் அகற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment