Sunday, July 17, 2011

ஊத்துக்கோட்டையில் அரசு மருத்துவமனைல் டாக்டர் இல்லாததால் பரிதாபம்

ஊத்துக்கோட்டை, ஜூலை 17:
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சரவணன் (24), தனியார் நிறுவன ஊழியர். தனது நண்பர்களான தாம்பரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர், நாகூர் மீரான், அரவிந்த், ஆனந்த்ராஜ், வெங்கட் ராமச்சந்திரன், விஷால், விக்னேஷ் உட்பட 9 பேருடன் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த நாகலாபுரம் அருகே சத்திகூடு மடுகு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் அனைவரும் குளித்தனர். குளித்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, சரவணனை மட்டும் காணவில்லை. அவரை தேடிய போது, மூச்சு திணறலால் நீர்வீழ்ச்சி அருகே மயங்கி கிடந்தார்.
உடனே,மாலை 4.30 மணியளவில் அவரை, ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால், அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் சரவணன் இறந்தார். சரவணனின் நண்பர்கள், அவரது சடலத்தை மருத்துவமனை முன்பு வைத்து அழுதனர்.
தகவலறிந்து, ஊத்துக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. ரஜினிகாந்த் அங்கு வந்தார். சம்பவம் நடந்த பகுதி ஆந்திர மாநிலம் என்பதால் நாகலாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

No comments:

Post a Comment