Sunday, July 17, 2011

ஊத்துக்கோட்டை செம்மர கட்டைகள் பிடிபட்டன

ஊத்துக்கோட்டையில் உள்ள நாகலாபுரம் சாலையில் உள்ள சோதனை சாவடியில், ஊத்துக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் அந்த கார் வேகமாக சென்றது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், எஸ்.ஐ.க்கள் ரஜினிகாந்த், கணேசன், ஏட்டு சங்கர் ஆகியோர் பைக்கில் காரை பின்தொடர்ந்து, ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே சுற்றி வளைத்தனர்.
உடனே, கார் கதவை திறந்து வெளியே வந்த டிரைவர் சற்று தூரம் ஓடினார். காருக்கு பின்னால் வந்த பைக்கில் ஏறி அவர் தப்பி விட்டார். பின்னர், போலீசார் காரில் சோதனையிட்டனர். அதில் 14 செம்மர கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த காரை, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். தப்பியோடிய டிரைவரையும், பைக்கில் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள்.

No comments:

Post a Comment